search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சிறப்பு மருத்துவ முகாம்
    X

    சிறப்பு மருத்துவ முகாம்

    • சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது
    • உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அரசுமருத்து–வமனையில் உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு ஆலங்குடி பேரூராட்சி மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.

    முகாமை ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் துவக்கி வைத்தார். மருத்துவர் டாக்டர் ஜோதிராஜன், சித்த மருத்துவர்டாக்டர் மணிவண்ணன், செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி, சுகாதார ஆய்வாளர் ஜேம்ஸ் மற்றும் பேரூராட்சி மேற்பார்வையாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை யில் முகாம் நடைபெற்றது.

    முகாமில் வீடற்றோர் மற்றும் முதியோர்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் சூரணம் மற்றும் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும் பொடி மற்றும் பூஸ்டர் ஊசி இலவசமாக வழங்கப்பட்டது.

    Next Story
    ×