என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி
- கறம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது
- கல்லூரியில் பயின்று வரும் மாற்று திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன் விடுதியில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கல்லூரியில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியை கல்லூரியின் முதல்வர் முனைவர் சந்திர வதனம் மலர்கள் அனைத்தும் மலர்ந்து மனம் வீசுவது போல் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல அவர்களும் போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்று கூறி விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில் கல்லூரியில் பயின்று வரும் அனைத்து துறையை சேர்ந்த 20 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் முனைவர் சுலோக்சனா தமிழ் துறை தலைவர் ரவி ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் கிருஷ்ணசாமி உடற்கல்வி இயக்குனர் மற்றும் பேராசிரியர்கள் தமிழ்ச்செல்வி சத்தியமூர்த்தி உமா மகேஸ்வரர் பாண்டி மாரியம்மாள் சுதாகர் மற்றும் அனைத்து துறை மாணவ மாணவியர்கள் கல்லூரி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்