search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து 7-ம் வகுப்பு மாணவன் பலி
    X

    மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து 7-ம் வகுப்பு மாணவன் பலி

    • மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து 7-ம் வகுப்பு மாணவன் பலியானார்
    • சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் இறந்தார்.

    புதுக்கோட்டை:

    கறம்பக்குடி அருகே உள்ள கரும்புலி காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் பிரவீன்குமார் (வயது 12). இவர் இலைகடி விடுதி அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரவீன்குமார், வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் அவரது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு சூரக்காட்டிற்கு சென்றார்.

    சூரக்காடு வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்று அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த பிரவீன்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் யோகரெத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×