search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரியில் ஏற்றி வந்த தேங்காய் நார் தீப்பிடித்து எரிந்து நாசம்
    X

    லாரியில் ஏற்றி வந்த தேங்காய் நார் தீப்பிடித்து எரிந்து நாசம்

    • லாரியில் ஏற்றி வந்த தேங்காய் நார் தீப்பிடித்து எரிந்து நாசமானது
    • ஓட்டுநர் கீழே குதித்து உயிர் தப்பினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி யை சேர்ந்தவர் தங்கசாமி மகன் ரெங்கசாமி (வயது 58) இவர் பாச்சிக் கோட்டையில் இருந்து தனது லாரியில், தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு மறவம்பட்டியில் உள்ள மில்லில் இறக்குவதற்காக சென்று கொண்டிருந்தார்.

    லாரி படேல் நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்ற மின் வயரில் தேங்காய் நார் உரசியது. இதில் தேங்காய் நார் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் லாரியும் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த ஓட்டுநர் லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அலறி அடித்து ஆலங்குடி தீயணைப்பு துறை, ஆலங்குடி போலீஸ் மற்றும் மின்சாரதுறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையிலான வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் தேங்காய் நார் முற்றிலும் எரிந்து நாசமானது. லாரியின் சில பகுதியும் முற்றிலும் எரிந்து நாசமானது. சேதாரமடைந்த லாரியின் மதிப்பு ரூ.4 லட்சம் என்றும் தேங்காய் நார் ரூ.1 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழுவினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண் டு வந்தனர். மேலும் லாரி முற்றுலும் எரிந்து நாசமானது . லாரியின் மதிப்பு 4,லட்சமும் தேங்காய் நார் மதிப்பு சுமார் 1 -லட்சம் இருக்கும் என்று மதிப்பீட்டு கூறப்படுகிறது.

    Next Story
    ×