search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தீக்குளித்த விவசாயி சாவு
    X

    தீக்குளித்த விவசாயி சாவு

    • தீக்குளித்த விவசாயி உயிரிழந்தார்
    • மனவிரக்தியில் இருந்ததாக தெரிகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் தெற்கு பொன்னன் விடுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48) விவசாயியான இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ரவிச்சந்திரன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கினார். அதில் அவரது வலது கை பாதிப்பு அடைந்தது. இதனால் அவர் விரக்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடல் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்துவிட்டார். தகவல் அறிந்த மலையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×