என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தீவிரம்
- ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தீவிரபடுத்தபட்டு வருகின்றன
- ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தினை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக நேற்று ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளை கலெக்டர் கவிதாராமு தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தனர்.
அப்போது சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்திய வழிகாட்டல் கடைப்பிடிக்கவில்லை எனவும், இதனை முழுமையாக செய்த பின் ஜல்லிக்கட்டு முறையாக நடத்த விழாக்குழுவினருக்கு அனுமதி வழங்கப்படும் என்றனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு நாளை (8-ந் தேதி) ஜல்லிக் கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவிப்பு ெவளியானது. இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தினை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பணிகளை தீவிரப்படுத்தினர். இதனை முன்னிட்டு விழா குழுவினர் மற்றும் ஜல்லிக்கட்டு காளையர்கள், ஜல்லிக்கட்டு உரிமையாளர்கள் உற்சாகம் அடைந்தனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்