search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிலட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி தேரோட்டம்
    X

    சிலட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி தேரோட்டம்

    • சிலட்டூர் முத்துமாரியம்மன் கோவில் வைகாசி தேரோட்டம் நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சிலட்டூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வந்தது. மேலும் பக்தர்கள் பால்குடம், காவடி, பறவைக்காவடி மற்றும் அலகுகுத்தி கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×