search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை மருத்துவ முகாம்
    X

    கால்நடை மருத்துவ முகாம்

    • தடுப்பூசி, குடற்புழு நீக்குதல், சினை ஊசி மாடுகளுக்கு போடப்பட்டது
    • 80 மாடுகளுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊராட்சி ரெகுநாத பட்டியில் கால்நடை மருத்துவத்துறையின் சார்பாக கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்குதல், மாடுகளுக்கு சினை ஊசி போடுதல் போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 80 மாடுகளுக்கு மேல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கால்நடைத்துறை சார்பில் சிறந்த மாடு, கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. முகாமிற்கு சுற்றுவட்டார பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து சிகிச்சை பெற்று பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கால்நடை மருத்துவர் புவனேஸ்வரி, உதவியாளர் சாந்தி மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×