என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விராலிமலை விவேகா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
- 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விராலிமலை விவேகா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை பெற்றது
- சிறப்பிடம் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் பள்ளி முதல்வர், நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் வாழ்த்துக்கள் கூறி பாராட்டினர்.
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள விவேகா மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவி சொர்ணராகினி வணிகவியல், கணக்குப்பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை தேடி தந்துள்ளார்.
மேலும் மாணவி ஹரிலட்சுமி பயாலஜி பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று மேலும் பெருமை சேர்த்துள்ளார். இதே போல 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் தர்ஷினி 477 மதிப்பெண்களும், பவதாரிணி 475 மதிப்பெண்களும், குணபிரியா 473 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்று தேர்ச்சியடைந்ததோடு, பள்ளியின் புகழை பறைசாற்றி உள்ளனர்.சிறப்பிடம் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் பள்ளி முதல்வர், நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் வாழ்த்துக்கள் கூறி பாராட்டினர்.
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் வெற்றி கண்டு சாதனை படைத்து வரும் விராலிமலை விவேகா மெட்ரிக். மேல் நிலைப்பள்ளியில் தற்போது பிரிகேஜி முதல் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இது குறித்த மேலும் விவரங்களுக்கு 04339-220087, 04339 221380, 89402 43366, 89402 43377, 89402 43388 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்