search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    இறந்த கணவரின் உடலை பார்த்து மயங்கி விழுந்த மனைவி சாவு
    X

    இறந்த கணவரின் உடலை பார்த்து மயங்கி விழுந்த மனைவி சாவு

    • இறந்த கணவரின் உடலை பார்த்து மயங்கி விழுந்த மனைவியும் உயிரிழந்தார்.
    • இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள துவரவல் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 31). இவரது மனைவி வினிதா(25). 3 ஆண்டுகளுக்க முன் திருமணமான இவர்களுக்கு 2 வயது மகள், 7 மாத மகன் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப த கராறு காரணமாக திருநாவுக்கரசு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருநாவுக்கரசை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பிரேத பரிசோதனைக்க பிறகு திருநாவுக்கரசு உடல் ஊருக்கு கொண்டு வரப்பட்டது. ஊர் முச்சந்தியில் உடல் இறக்கிவைக்கப்பட்டபோது, அங்கு மனைவி வினிதா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது வினிதா திடீரென மயங்கி விழுந்தார்.இதனை அடுத்து கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட வினிதா, ஏற்கனே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவரின் உடலை பார்த்த மனைவியும் ம யங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×