search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருப்பர் கோவிலில் மது எடுப்பு திருவிழா
    X

    கருப்பர் கோவிலில் மது எடுப்பு திருவிழா

    • கருப்பர் கோவிலில் மது எடுப்பு திருவிழா நடைபெற்றது.
    • பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் வழிபட்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காசாம்பு நீலமேனி கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதளுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து எட்டு நாட்களும் மண்டகப் படிதாரர்களால் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் கடைசி நாளான நேற்று முக்கிய நிகழ்வான மது எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கறம்பக்குடி தட்டாவூரணி தென்நகர் அக்ரஹாரம் குலகாரன் தெரு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது இல்லங்களில் குடங்களை வைத்து அதில் தென்னம்பாளைகளை வைத்து அலங்கரித்து தலையில் சுமந்தபடி கறம்பக்குடி சீனி கடை மூக்கில் உள்ள முருகன் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்றும், பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் அருள்மிகு காசாம்பு நீலமேனி கருப்பர் கோவிலில் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கறம்பக்குடி காவல் நிலைய ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் தலைமையில் செய்திருந்தனர்.

    Next Story
    ×