search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரசவத்திற்கு பின் வலிப்பு ஏற்பட்டு பெண் பலி
    X

    பிரசவத்திற்கு பின் வலிப்பு ஏற்பட்டு பெண் பலி

    • பிரசவத்திற்கு பின் வலிப்பு ஏற்பட்டு பெண் பலியானார்
    • ஆண் குழந்தை பிறந்த நிலையில் உயிரிழப்பு

    புதுக்கோட்டை

    பொன்னமராவதி தாலுகா தொட்டியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி தேன்மொழி (வயது 22). பிரசாந்த் தனது மனைவியை பிரசவத்திற்காக மேலைச்சிவபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தேன்மொழிக்கு திடீரென வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே தேன்மொழி பரிதாபமாக இறந்தார். கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் திடீரென வலிப்பு ஏற்பட்டு அந்த பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேன்மொழிக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆவதால் இலுப்பூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×