search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    புதுக்கோட்டை பள்ளியில் உலக யோகா தின விழா கொண்டாட்டம்
    X

    புதுக்கோட்டை பள்ளியில் உலக யோகா தின விழா கொண்டாட்டம்

    • புதுக்கோட்டை பள்ளியில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
    • மழலையர்கள் யோகா தின உறுதி மொழி எடுத்துக்கொண்டு யோகா பயிற்சிகள் செய்தனர்.

    புதுக்கோட்டை,

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை திலகர் ஏவிசிசி மழலையர் பள்ளியில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் நிறுவனரும், ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனருமான ஏவிசிசி கணேசன் குத்துவிளக்கேற்றி யோகா தின விழாவை துவக்கி வைத்து யோகா பயிற்சியின் அவசியத்தை விளக்கி பேசினார். அப்போது, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2014-ல் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்தான், கடந்த 9 ஆண்டுகளாக சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவதையும், அமெரிக்கா பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி ஐ.நா. சபையில் யோக தினம் கொண்டாடுவதை பெருமையுடன் குறிப்பிட்டார். தொடர்ந்து மழலையர்கள் யோகா தின உறுதி மொழி எடுத்துக்கொண்டு யோகா பயிற்சிகள் செய்தனர். ஏவிசிசி பள்ளி நிர்வாகி மல்லிகா கணேசன் மற்றும் ஆசிரியைகள், பணியாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×