search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
    X

    மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

    பெண் உட்பட இருவர் படுகாயம்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை அருகே உள்ள வயலோகத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் பாலசுப்பிரமணியன் (வயது 13). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் நெருங்கிய உறவினர் ஆறுமுகம் இறந்த துக்கத்திற்கு குடும்பத்தோடு வந்து உள் ளார்.இந்நிலையில் கல்லாலங் குடி இந்திரா நகரை சேர்ந்த சவுந்தர் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவர்கள் ஜான்சி (21), லெனின் (24). துக்க நிகழ்ச்சி முடிந்த பிறகு பாலசுப்ரமணியன் ஜான்சி வீட்டிற்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.அப்போது அங்குள்ள சுவிட்சை தொட்டபோது எதிர்பாராத விதமாக மின் சாரம் அவரது உடலில் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த ஜான்சி மற்றும் லெனின் ஆகிய இருவரும் அவரை மீட்க முயன்றுள்ளனர். இதில் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. விபத்தில் 3 பேரும் மயங்கினர்.அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த மின் இணைப்பை துண்டித்து மூவரையும் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரி–வில் சேர்த்தனர். ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாலசுப்பிரமணியம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.காயம் அடைந்த இருவ–ரையும் போலீசார் புதுக் கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியும், இறந்த பாலசுப்ரமணியம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வ ருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ் பெக்டர் அழகம்மை விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×