search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கும்மி அடித்து ஊர்வலமாக முளைபாரி எடுத்து வந்த பெண்கள்
    X

    கும்மி அடித்து ஊர்வலமாக முளைபாரி எடுத்து வந்த பெண்கள்

    • புதுக்கோட்டை மகிமை நாயகி அம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் முளைபாரி எடுத்து வந்தனர்
    • பக்தர்கள் அலகு குத்தி பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை,

    வடக்கு மூன்றாம் வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மகிமைநாயகி முத்துமாரிஅம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, அம்மன்வீதியுலா நடைபெற்றது. தினமும் மண்டகப்படியும் நடைபெறு கிறது. பக்தர்கள் அலகு குத்தியும், மஞ்சள் ஆடையில் பால்குடம்ஏந்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும், கரும்பு தொட்டில் கட்டி அதில்குழந்தையை வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தும், பொங்கல்வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மாலையில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று வழிபட்டனர். இரவு அம்மன் சிம்ம வாகனத்தில்மலர் அலங்காரத்தில்பல்வேறு வீதி வழியாக பவனி வந்தார்.கோவிலில்மூலவர் மகிமைநாயகி முத்துமாரிஅம்மன் வெள்ளிக்காப்பு மலர் அலங்காரத்திலும் உற்சவர் சிம்ம வாகனத்தில் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடு களை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×