search icon
என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டையில் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு செய்தார்
    • விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தாந்தாணி ஊராட்சி, சிதம்பரவிடுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ்  கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின் போது பணிகளை விரைவாகவும், நேர்த்தியாகவும் முடிக்க அவர் உத்தரவிட்டார்.  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேலன், இந்திராகாந்தி, ஊராட்சிமன்றத் தலைவர் மெய்யநாதன் மற்றும் அரசுஅலுவலர்கள்  இந்த ஆய்வின் போது உடனிருந்தனர்.

    • இலங்கைக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
    • நடுக்கடலில் மீனவர்களே துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கடற்கரையிலிருந்து நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த வியாழன் இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.சுமார் 5 மைல் நாட்டிக்கல் தொலைவில் மீனவர்கள் மீன் க்கொண்டிருக்கையில் அங்கே இலங்கையை சேர்ந்த படகும், தமிழகத்தை படகும் அருகருகே நின்று கொண்டிருப்பதை கண்டுள்ளனர்.உடனே சந்தேகமடைந்த மீனவர்கள் அருகே சென்று பார்க்க முயன்றுள்ளனர். அதற்குள் சுதாரித்த இலங்கை படகை ஓட்டி வந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து படகோடு தப்பித்து சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து தமிழக படகை மடக்கி பிடித்த மீனவர்கள் அதில் இருந்த 2 பேரை கடலோர பாதுகாப்பு குழுமத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

    கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் அவர்களை விசாரித்ததில் குமரப்பன்வயல் மற்றும் செய்யானம் பகுதியை சேர்ந்த சங்கர் (32), ராஜதுரை (26) என்பதும் இவர்கள் இலங்கைக்கு 120 கிலோ கஞ்சா கடத்தியதும் தெரியவந்துள்ளது.அதனை தொடர்ந்து இருவரையும் மணமேல்குடி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு,மது அமலாக்கத்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கரகத்திக்கோட்டையை சேர்ந்த செந்தில் (50) என்பவர் இவர்களுக்கு கஞ்சா விநியோகம் செய்தது தெரிய வந்துள்ளது.அதனை தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தும் செயலில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.கஞ்சா கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் வேறு சிலர் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைது செய்யப்பட்ட சங்கர், ராஜதுரை.

    • புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சபேட்டையில் பகுதிநேர அங்காடி திறக்கப்பட்டது
    • கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை திறந்து வைத்தார்

    கந்தர்வகோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சபேட்டை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பகுதி நேர அங்காடியை கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை திறந்து வைத்து அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா, ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா சுப்ரமணியன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க மேலாளர் கணேசன், மாவட்டக் குழு ராமையன், சித்திரவேல் , ரத்தினவேல், இளையராஜா மற்றும் துணைத் தலைவர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இருக்கை வழங்கும் விழா நடைபெற்றது
    • சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இருக்சுகை வழங்கும் விழா நடைபெற்றது. சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் இவ்விழாவில் கலந்து கொண்டு மாணாக்கர்களுக்கு இருக்கைகள் வழங்கினார். அதன் பின்னர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள வாகனம் நிறுத்துமிடத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் ஊராட்சியில் பணியில் ஈடுபட்டிருந்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களிடம் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துரையாடி அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    • என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் திடகழிவு மேலாண்மை திட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி ஆணையர் சியாமளா தலைமையில் நடை பெற்றது.
    • அதனால் சாலையில் வேக தடை அமைத்து தர வேண்டும் , அதே போல் தெருவிளக்குகள் கூடுதலாக அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையில் நரிமேடு பகுதியில் உள்ள நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்பில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் திடகழிவு மேலாண்மை திட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி ஆணையர் சியாமளா தலைமையில் நடை பெற்றது.

    இதில் நகர் நல அலுவலர் பாஸ்கர் , ஆய்வாளர் பாபு, நகர்மன்ற கவுன்சிலர் பழனிவேல், மேஸ்திரி இள ங்கோவன் மற்றும் எஸ்.பி.எம். டீம் கலந்துக் கொ ண்டனர் . அப்போது அப்ப குதி மக்களிடம் குப்பைகளை எவ்வாறு மக்கும் குப்பை வகைகள், மக்காத குப்பை வகைகள், அபாயகரமான குப்பை வகைகள் குறித்து விவரிக்க ப்பட்டது. அப்போது ஆணையரிடம் அப்பகுதி மக்கள் சாலையில் இருச்சக்க ர வாகனங்களை அதிக வேகமாக சிலர் ஓட்டுகி ன்றனர் .

    அதனால் சாலையில் வேக தடை அமைத்து தர வேண்டும் , அதே போல் தெருவிளக்குகள் கூடுதலாக அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது நகராட்சி ஆணை யர் சியாமளா கூறுகையில்,

    இங்குள்ள 1920 வீடுகளுக்கு கடந்த 3 ஆண்டுகள் கணக்கில் எடுத்துக் கொண்டு வீட்டு வரி ரூ.5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மார்ச் மாதத்திற்குள் அனைவரும் செலுத்தி தங்க ள் பெயரில் வீட்டு வரியை மாற்றிகொள்ள வேண்டும் என்றார். மேலும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சி.சி.டி.வி. அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

    அதற்கு மக்கள் பங்களிப்போடு நகராட்சியும் அதிகளவில் பங்களிப்பை தரும் என்றார். வீட்டு வரி செலுத்தி விட்டால் அரசின் அனைத்து வசதிகளையும் முழுமையாக பெறலாம் என்றார்.

    • புதுக்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவில் தளபதி விஜய் நூலகத்தை தளபதி விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளரும், நகர் மன்ற உறுப்பினருமான ஜெ.பர்வேஸ் குத்துவிளக் கேற்றி தொடங்கி வைத்தார்.
    • ஏற்கனவே விலையில்லா உணவகம், மாணவ, மாணவிகள் பயில பயிலகம் திறக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாரியம்மன் கோவில் ெதருவில் தளபதி விஜய் நூலகத்தை தளபதி விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளரும், நகர் மன்ற உறுப்பினருமான ஜெ.பர்வேஸ் குத்துவிளக் கேற்றி தொடங்கி வைத்தார்.

    ஏற்கனவே விலையில்லா உணவகம், மாணவ, மாணவிகள் பயில பயிலகம் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பயிலகம் அருகிலேயே விஜய் நூலகத்தை டாக்டர் ஜெ.பர்வேஸ் திறந்து வைத்தார். அப்பகுதி மக்கள் இந்நூலகத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

    விஜய் ரசிகர்களை மாவட்ட தலைவர் ஜெ.பர்வேஸ் இதுபோன்ற செயல்களால் ஒருங்கிணைக்கிறார். ஏற்கனவே விஜய் அரசியல் பிரவேசம் செய்ய எண்ணியுள்ள நிலையில் புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கம் அதை நோக்கி செல்கிறது. எப்படி இருந்தாலும் யார் இருந்தாலும் மக்களுக்கு நன்மை கிடைத்தால் பரவாயில்லை என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர் .

    • புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், செய ல்படுத்தப்படும் திட்ட ங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.
    • வளர்ச்சித் திட்டங்களை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறு த்தப்பட்டது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், செய ல்படுத்தப்படும் திட்ட ங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்த தாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் கிராமப்பு றங்களில் அடிப்ப டை கட்ட மைப்பு வசதிகளை மேம்ப டுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை யின் சார்பில், செயல்படு த்தப்படும் திட்ட ங்கள் குறித்த ஆய்வுக் கூட்ட ம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் திட்டம், பாரத பிரதமரின் கிஸான் சம்மான் நிதித் திட்டம், ஜல் ஜீவன் மிசன், மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பா டுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.

    மேலும் வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவடி க்கையாக ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், அரசு கட்டிட ங்கள் உள்ளிட்ட வைகளை கண்கா ணித்து சேதமடை ந்துள்ள கட்டிடங்களை பாதுகா ப்பாக இடித்து அப்புறப்ப டுத்திட உரிய நடவ டிக்கை கள் மேற்கொ ள்ளுமாறு தொடர்புடைய அலுவ லர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டது.

    மேற்கண்ட வளர்ச்சித் திட்டங்களை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறு த்தப்பட்டது என மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர் ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பி ரியா, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவல ர்கள் மற்றும் அரசு அலுவ லர்கள் பலர் கலந்துகொ ண்டனர்.

    • பா.ஜ.க. மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திகேயன் தலைமையில், புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • பின்னர் புதிதாக உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

    புதுக்கோட்டை

    பா.ஜ.க. மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திகேயன் தலைமையில், புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை திருமயம் சாலை அரசு மாமன்னர் கல்லூரி எதிரில் பந்தல் அமைத்து நடைபெற்ற இந்த உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாமில் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க. பொது செயலாளர் கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் புதிதாக உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

    இம்முகாமில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் மிஸ்டுகால் கொடுத்து பா.ஜ.க.வில் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். புதுக்கோட்டை நகர பா.ஜ.க. இளைஞரணித் தலைவர்கள் சுதாகர்,சிரஞ்சீவி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • புதுக்கோட்டையில் பட்டியலின அரசு பெண் ஊழியருக்கு சாதிய வன்கொடுமை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
    • இளமுருகு முத்து கண்டனம்

    புதுக்கோட்டை,

    அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது,இந்த சூழலில் காவல்துறை நடவடிக்கையை துரித படுத்தாமல் மெத்தனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.கடந்த அக்டோபர் மாதம் 20 -ந் தேதி புதுக்கோட்டை புறநகர் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து துறை அலுவலகத்தில் பணியாற்றும் சுகந்தி என்ற பட்டியலின அரசு ஊழியரை அதே அலுவலகத்தில் பணியாற்றும் ஆதிக்க சமுகத்தை சேர்ந்த நபர் அவருடைய ஜாதியை சொல்லி அருவருக்க தக்க வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.இதனால் மன உழைச்சளுக்கு ஆளான சுகந்தி புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திலும் மேலும் புதுக்கோட்டை துணை காக்காணிப்பாளரை நேரில் சந்தித்தும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சொல்லி புகார் மனு அளித்துள்ளார்.இது நடந்து ஒரு மாத காலமாகியும் காவல் துறை சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேங்கை வயல் சம்பவம் நடந்து ஒரு வருடமாகியும் இன்னும் ஒரு குற்றவாளிகள் கூட கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீண்டும் இது போன்ற சம்பவங்களில் காவல் துறை பாரமுகம் காட்டுவது வேதனை அளிக்கிறது.இந்த விஷயத்தில் காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டு வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் தவறும் பட்சத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை கையில் எடுக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அறந்தாங்கி அருகே பெருங்காடு அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
    • அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

    அறந்தாங்கி, 

    தமிழகம் முழுவதும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள், கலை நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெருங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.விழாவில் சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து கடந்தவாரம் குழந்தைகள் தின விழா நிகழ்ச்சின்போது பள்ளி வளாகத்தில் உயிரிழந்த மாணவன் மாரிமுத்துவின் உறவினர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், ஒன்றியச் செயலாளர்கள் சக்திராமசாமி, பொன்கணேசன், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் சரிதாமேகராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.மரம் நடும் விழாவை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்த போது எடுத்தப்படம்.

    • புதுக்கோட்டை பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
    • மழைக்காலங்க ளில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூ டிய மாவட்ட அவசரக் கட்டுபாட்டு அறை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள பேரிடர்மேலாண்மை அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் குறித்து, கலெக்டர்மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர்மாவட்ட கலெக்டர் கூறும்போது:-இந்த ஆய்வின்போது, மழை அளவின் பதிவேடு களையும், மழையினால் ஏற்படும் உயிரிழப்புகள், பாதிப்புகள், கட்டட இடிமானங்கள் உள்ளிட்ட வைகளின் விவரங்களையும் கேட்டறியப்பட்டது.மேலும் இதுபோன்ற பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, தீவிர மழைக்காலங்களில் பொது மக்களை பேரிடர்க ளிலிருந்து காப்பாற்றிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இந்நிலையில் பேரிடர்மே லாண்மை அலுவலகத்தின் அலைபேசிக்கு உதவி கோரி வரும் அழைப்புகளை உரிய முறையில் பரிசீலனை செய்து, விரைவாக நட வடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது.இடிந்துவிழும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக எவ்வித இடையூறும் ஏற்ப டாத வகையில் அப்புறப்ப டுத்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், புயல், வெள்ளம் ஏற்படும் காலங்களில் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ஏதுவாக 10 - பல்நோக்கு பேரிடர் மையக் கட்டிடங்கள் மற்றும் நிவாரண மையங்கள் தயார்நிலையில் உள்ளன.மேலும், மழைக்காலங்க ளில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூ டிய மாவட்ட அவசரக் கட்டுபாட்டு அறை எண் - 1077, 04322-222207 ஆகிய கட்டணமில்லா தொலை பேசி எண்களைதொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க லாம். இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது, தனிவட்டாட்சி சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர்உடனிருந்தனர்.

    • மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காட்டுப்புத்தூர் வாய்க்காலை தூர்வார அறிவுறுத்தப்பட்டு உள்ளது
    • புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகராட்சி, தொண்டைமான்நகர் பகுதியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் நகர்புற வீடற்றோர்க ளுக்கான இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தினை நேசக்கரம் தொண்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இவ்வில்லத்தில் 35-க்கும் மேற்பட்ட முதியோர்கள் தங்கி வருகின்றனர். இங்கு தங்கி உள்ளவர்களுக்கு தேவை யான குடிநீர், உணவு, மருத்துவம் உள்ளிட்ட வைகள் போதுமான அள வில் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில், தொடர்ந்து மழையின் காரணமாக மழைநீர் வெள்ள பாதிப்பு களை தவிர்க்கும் வகையில் காட்டுப்புதுக்குளம் வாய்க்காலில் சேர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை தூர்வாரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ள நகராட்சி அலுவ லர்க ளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வுகளின்போது, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட சமூகநல அலுவ லர்கோகுலப்பிரியா, வட்டாட்சியர் கவியரசன், நகராட்சி அலுவலக மேலா ளர் காளியம்மாள் மற்றும் அரசு அலுவலகள் பலர் உடனிருந்தனர்.

    ×