என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
செந்துறையில் ராகுல் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
- செந்துறையில் ராகுல் காந்தி பிறந்தநாள் கொண்டாடபட்டது
- விழாவிற்கு செந்துறை வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அண்ணா சிலை அருகே ராகுல் காந்தியின் 54-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு செந்துறை வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கொளஞ்சிநாதன் வரவேற்றார். கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக மாநில காங்கிரஸ் கட்சி துணை தலைவர் டாக்டர் மணிரத்னம் கலந்து கொண்டு செந்துறை ஒன்றியத்தில் உள்ள 15 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-2 பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற 24 மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், மாணவர்களை கல்வியே முன்னேற்றம் செய்யும். ராகுல் காந்தி பிரதமரானால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும், அனைவருக்கும் இலவச கல்வி, இலவச மருத்துவம் கிடைக்கும். இதுவரை 30 ஆயிரம் பேருக்கு கல்வி உதவித் தொகை கொடுத்துள்ளேன். எனது வாழ்நாளில் 60 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று உறுதி ஏற்று உள்ளேன் என்று பேசினார். முடிவில் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்