என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
விட்டு விட்டு பெய்யும் மழை.. கூல் கிளைமேட்டில் வைப் செய்யும் சென்னை மக்கள்..!
- வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
- சென்னை நகரில் நாளையும் மழை மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், இன்று பிற்பகல் முழுக்க நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அதன்படி தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இதே போன்று வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, கந்தன்சாவடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ X வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதவிர நாளை காலை நகரின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டமாகவும், சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பாதக தெரிவித்துள்ளது. மாலை அல்லது இரவு வேலையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என்று மேலும் தெரிவித்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்