search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நள்ளிரவில் பெய்த கனமழையால் மாமல்லபுரம் கிருஷ்ணர் மண்டபத்தில் தண்ணீர் தேங்கியது
    X

    நள்ளிரவில் பெய்த கனமழையால் மாமல்லபுரம் கிருஷ்ணர் மண்டபத்தில் தண்ணீர் தேங்கியது

    • சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
    • மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பூமியின் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று காலை வரை கனமழை பெய்தது. மழை காரணமாக, கிருஷ்ணர் மண்டபம் வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதேபோல் ஐந்து ரதம் நுழைவு வாயில், கலங்கரை விளக்கம் சாலை, கடற்கரை சாலை பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது இதனால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், இந்த கனமழையால் மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பூமியின் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது.

    Next Story
    ×