search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருமத்தம்பட்டியில் சாலைகளில் குளம்போல் தேங்கும் மழைநீர்
    X

    கருமத்தம்பட்டியில் சாலைகளில் குளம்போல் தேங்கும் மழைநீர்

    • சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் அபாயமும் உள்ளது.
    • வடிகால் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்.

    கருமத்தம்பட்டி,

    கோவையில் கருமத்தம் பட்டி கிருஷ்ணாபுரம் பவர்ஹவுஸ் ஆகிய பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தரைமட்ட பாலம் கட்டப்பட்டது, அங்கு நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் அங்கு உள்ள சாலைகளில் மழைநீர் குளம்போல தேங்கி நின்றது. எனவே அந்த வழியாக நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கூறியதாவது:-

    கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை மழைநீர் சாலையில் தேங்கியதால் அங்கு உள்ள சாலை பழுதடைந்தது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடந்தன.

    இதனை தொடர்ந்து அந்தபகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் செல்லும் வகையில் தரைமட்ட பாலம் கட்டப்பட்டது. ஆனால் அங்கு மழைநீர் செல்வதற்கான வாய்க்கால் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் மழை நீர் வடிகால் அமைக்க கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இந்நாள் வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை காரணமாக கிருஷ்ணாபுரம், பவர்ஹவுஸ், சோமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலையில் தற்போது மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர-நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் செந்தில் நகர் பகுதியில் இருந்து வரும் மழைநீர், கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்பதால், அங்கு உள்ள கடைகளுக்குள் சாக்கடை கழிவு நீர் புகுந்து உள்ளது. எனவே அங்கு உள்ள ஊழியர்கள் கடைக்குள் புகுந்த மழை நீரை வாளி மூலம் இறைத்து வெளியேற்றி வருகின்றனர்.

    இதுதவிர சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் அபாயமும் உள்ளது. எனவே கருமத்தம்பட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த பகுதியில் மழைநீர் செல்ல ஏதுவாக வடிகால் கால்வாய் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×