search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜீவ்காந்தி நினைவு நாள்- ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் நாளை மரியாதை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ராஜீவ்காந்தி நினைவு நாள்- ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் நாளை மரியாதை

    • சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
    • சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் நாளை (21-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே திட்டமிட்டபடி, நாளை ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    காலை 8 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. மருத்துவ முகாம் நடக்கிறது. தேசபக்தி பாடல்களை இசைக்குழுவினர் பாடுகிறார்கள். தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படும்.

    காலை 10.30 மணிக்கு சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

    காலை 11 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படும்.

    இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், செயல் தலைவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×