search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழ்கடல் மீன்கள் குகை பொருட்காட்சி
    X

    ஆழ்கடல் மீன்கள் குகை பொருட்காட்சி

    • ஆழ்கடல் மீன்கள் குகை பொருட்காட்சி தொடங்கப்பட்டது.
    • தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் திறந்து வைத்தார்

    கீழக்கரை

    ராமநாதபுரம்- மதுரை ரோட்டில் ராஜா மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் மதுரையைச் சேர்ந்த எம்.டி.சி. நிறுவனத்தின் சார்பில் முதன்முறையாக ஆழ்கடல் மீன்கள் குகை கண்காட்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்காட்சி தொடங்கப் பட்டது. இதன் திறப்பு விழா நிறுவன உரிமையாளர் சிட்டிபாபு தலைமையில் நடைபெற்றது.

    மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிநகரம் முத்துக்கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொருட்காட்சியை திறந்து வைத்தார். தி.மு.க மதுரை மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் கிருஷ்ணகுமார், கவுன்சிலர் இந்திரா மேரி, அ.திமு.க நிர்வாகி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இப்பொருட்காட்சியில் ஆழ்கடல் போன்ற செட்டில் கண்ணாடி குகை அமைத்து அதில் பலவகையான வண்ண ஆழ்கடல் மீன்கள் நிரம்பிய கண்காட்சி அமைக் கப்பட்டது. மேலும் பொழுது போக்கு பூங்கா, ஷாப்பிங் மேலா, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் உணவகங் கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் பனிக்குகை, 3-டி ஷோ, பேய் வீடு, பல வகையான ராட்டினங்கள், ஜெயிண்ட்வீல் போன்ற குழந்தைகளுக்கான விளை யாட்டு அரங்குகள் அமைக் கப்பட்டுள்ளது.

    இந்த பொருட்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை நிறுவன மேலாளர் உமாபதி செய்திருந்தார்.

    Next Story
    ×