search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக மகளிர் தின பேரணி
    X

    உலக மகளிர் தின பேரணி

    • தொண்டியில் உலக மகளிர் தின பேரணி நடந்தது.
    • இந்த பேரணியானது தொண்டி பழைய பஸ் நிலையத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்று கடற்கரை மரைன் போலீஸ் நிலையம் அருகே முடிவடைந்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உலக பெண்கள் தினத்தையொட்டி பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடந்தது. ராமநாதபுர மாவட்ட மக்கள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு பொருளாளர் ரூபி தலைமை வகித்தார்.

    தமிழக பெண்கள் கூட்டமைப்பின் முன்னாள் மாநில தலைவி ராமலெட்சுமி முன்னிலை வகித்தார். எஸ்.எம்.எஸ்.எஸ்.எஸ் இயக்குநர் பிரிட்டோ ஜெயபாலன் வாழ்த்திப் பேசினார். தமிழக பெண்கள் கூட்டமைப்பின் துணை தலைவி தங்கச்சிமடம் ராஜேஸ்வரி, மாவட்ட மக்கள் அமைப்பு துணை தலைவி செங்கோல்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பரமக்குடி ஒன்றிய மக்கள் அமைப்பின் தலைவி ரெஜினா அனைவரையும் வரவேற்றார். மண்டபம் ஒன்றிய மக்கள் அமைப்பு உறுப்பினர் கர்லோபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் முதுகுளத்துார் மக்கள் அமைப்பு உறுப்பினர் இருதயராணி நன்றி கூறினார்.

    டெய்ஸி அருள்ஜோதி உட்பட 8 யூனியனைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பெண்கள் பேரணியில் கலந்துகொண்டனர். இந்த பேரணியானது தொண்டி பழைய பஸ் நிலையத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்று கடற்கரை மரைன் போலீஸ் நிலையம் அருகே முடிவடைந்தது.

    Next Story
    ×