search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மக்கள் தொடர்பு முகாம்
    X

    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

    மக்கள் தொடர்பு முகாம்

    • கமுதி அருகே மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
    • இதில் பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள நீராவி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகையில், தற்போது இணையதளம் மூலம் அரசின் அனைத்து துறை களிலும் திட்டங்களை குறித்து பயன் பெறலாம். தனிநபர் பொருளாதாரம் முன்னேற்றத்திற்கு அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகின்றன. உதவிகள் வழங்கப்பட்டன. உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் கந்தசாமி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்வி வட்டாட்சியர் சிக்கந்தர் பவிதா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வாசுதேவன், நீராவி ஊராட்சி மன்ற தலைவர் வாழ்ராஜ், துணைத் தலைவர் ஏ.பி.நாகராஜன், ஊராட்சி ஆணையாளர்கள் மணிமேகலை, ராஜகோபால் மண்டல துணை தாசில்தார் முத்துராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×