search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
    X

    ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

    • 7 -ந் தேதி முதல் 3 நாட்கள் ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்யவதாக மாநில துணைதலைவர் தகவல் தெரிவித்தார்.
    • 11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தொடர்பு வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் மாநில துணைதலைவர் தினகரன், இணை செயலாளர் மாரிமுத்து ஆகியோர் கூறியதாவது:-

    கூட்டுறவுதுறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரேஷன்கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஊதியம், ஓய்வூதியம்,பணிவரன் முறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தொடர்ந்து போராடுகிறோம்.

    31 சதவீத அகலவிலைப்படி, தனித்துறை, புதிய விற்பனை முனையம், மோடம் வழங்குதல், சரியான எடையில் தரமான பொருட்கள் பொட்டலமாக வழங்க வேண்டும் ஆகிய 11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வருகிற 7 முதல் 9 வரை 3 நாட்கள் மாநிலம் தழுவிய தொடர்பு வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். மாவட்ட செயலாளர் ஞானசேகரன், பொருளாளர் செல்வம் உடன் இருந்தனர்.

    Next Story
    ×