என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
- யூனியன் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை விடுத்தனர்.
- தலைவர் ஜெயந்தன் தலைமையில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியின் பெற்றோர் ஆசிரிய கழகக் கூட்டம் தலைவர் ஜெயந்தன் தலைமையில் நடைபெற்றது.
பேரூராட்சி உறுப்பினர்கள் மஹ்ஜபின் சல்மா, ஷமீமா பானு, பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா முன்னிலை வகித்தனர். ஆசிரியை சுபஸ்ரீ வரவேற்றார்.250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கும் நிலையில் தலைமை ஆசிரியை உட்பட 4 ஆசிரியைகளே பணியாற்றுவதால் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் குறைய வாய்ப்பு உள்ளது.
எனவே இங்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிரப்ப அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றினர். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கி சீர்வரிசையாக கொண்டுவந்தனர். மக்கள் சட்ட உரிமைகள் கழக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளரும், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினருமான சுந்தூஸ்கான் மாணவ, மாணவிகள் ஒளி, ஒலி வழி கல்வி பயில பள்ளிக்கு புரொஜெக்டரை வழங்கினார்.
மாவட்ட செயலாளர் ஹாஜா முகைதீன், மாவட்ட அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட போக்குவரத்து அணி அமைப்பாளர் மனோகரன், திருவாடானை ஒன்றிய அணி அமைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.முடிவில் ஆசிரியை புஷ்பா நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்