search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிலான கருத்தரங்கம்
    X

    மாநில அளவிலான கருத்தரங்கம்

    • மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
    • சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைக்கழக அரபு மற்றும் உருது துறை பேராசிரியர் ஜாகிர் உசேன் கலந்து கொண்டு பேசினார்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அரபித்துறை சார்பில் இஸ்லாமும் சமூக நீதியும் எனும் தலைப்பில் மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் முதல்வர் சதக்கத்துல்லா தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைக்கழக அரபு மற்றும் உருது துறை பேராசிரியர் ஜாகிர் உசேன் கலந்து கொண்டு பேசினார். இஸ்லாமும், சமூக நீதியும் என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது, கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் ஜாகிர் உசேன் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். முகம்மது சதக் தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் அலாவுதீன், கணிணித் துறை பேராசிரியர் முகம்மது நஜிமுதீன் ஆகியோரும் பேசினர். இதற்கான ஏற்பாடுகளை அரபி துறை தலைவர் முகைதீன் அப்துல் காதர், தமிழ்துறை பேராசிரியர் பாபு ஆகியோர் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் முகம்மது யூசுப், செயலர் சர்மிளா மற்றும் இயக்குநர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×