search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் மாவட்ட கருவூல அலுவலருடன் சந்திப்பு
    X

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் மாவட்ட கருவூல அலுவலருடன் சந்திப்பு

    • தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் மாவட்ட கருவூல அலுவலருடன் சந்தித்து பேசினர்.
    • ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் சம்மந்தமாக மாவட்ட கருவூல அலுவலரை சந்தித்து பேசினோம்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் மாவட்ட கருவூல தலைமை அலுவலரை சந்தித்து பேசினர்.இந்த சந்திப்பு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணை பாளருமான முருகேசன் கூறியதாவது:-

    ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் சம்மந்தமாக மாவட்ட கருவூல அலுவலரை சந்தித்து பேசினோம். மாவட்ட கருவூல அலுவலரிடம் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலனை தாமதப்படுத்தாமல் விரைவில் வழங்க கிளை கருவூல அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டு கொண்டோம். மேலும் கருவூலத்திற்கு அனுப்பப்படும் பில் களை தாமதப்படுத்தாமல் விரைவாக நடவடிக்கை மேற் கொள்ள கிளை கருவூல அலுவலர்களுக்கு அறிவு றுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டோம். எங்களின் கோரிக் கைளை கேட்டறிந்த மாவட்ட கருவூல அலுவலர் இது சம்மந்த மாக அனைத்து கிளை கருவூல அலுவலர்களுக்கும் சுற்றறிக் கை அனுப்புவதாக உரிதி அளித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் மாவட்டச்செயலாளர் லிங்கதுரை, மாவட்ட பொருளாளர் கனகராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், மாவட்ட சட்ட ஆலோசகர் நவீன் அ.மாரி, செய்தி தொடர்பாளர் காளிதாஸ், தலைமை நிலைய செயலாளர் வழிவிட்ட அய்யனார், துணைத்தலைவர்கள் பூமிநாதன், ராஜ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கார்த்திக், கடலாடி வட்டாரத் தலைவர் அருட் செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×