search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
    X

    போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

    • போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீஸ் நிலையத்தில் பேசிக் கொள்ளலாம் என்று கூறினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முத்திருளாண்டி சேர்வை தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (32). இவர் மனைவியுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் வெங்கடேசுக்கு ''ஹலோ போலீஸ்'' கொடுத்த தகவல் மூலம் அங்கு வந்தார். அவர் தம்பதியினரிடம் சண்டை போட வேண்டாம், போலீஸ் நிலையத்தில் பேசிக் கொள்ளலாம் என்று கூறினார்.

    அதற்கு ஆனந்தராஜ் எங்க குடும்ப பிரச்சினையில் தலையிட நீ யாருடா? என்று தகாத வார்த்தையில் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்தார். மேலும் இங்கிருந்து செல்லா விட்டால் கொலை செய்து விடுவேன் என்று அரிவாளை காட்டி போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து போலீஸ்காரர் வெங்கடேஷ் கமுதி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆனந்தராஜை கைது செய்தனர்.

    Next Story
    ×