search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரக அளவிலான விளையாட்டு போட்டி:   ஸ்டான்லி மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி  மாணவர்கள் சாதனை
    X

    சரக அளவிலான விளையாட்டு போட்டி: ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

    • ஆண்களுக்கான கோ-கோ விளையாட்டில் ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களை இப்பள்ளியின் தாளாளர் முருகேசன் மற்றும் செயலாளர் பிரு ஆனந்த் பிரகாஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் கடத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    வயது வரம்பு அடிப்படையில் நடைபெறும் போட்டிகளில் ஆண்களுக்கான கோ-கோ விளையாட்டில் ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி சரகத்தில் உள்ள பல பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 14 வயது, 17 வயது, 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கோ-கோ போட்டியில் அனைத்து பிரிவிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் வெற்றிபெற பயிற்சி அளித்த உடற்பயிற்சி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்தகுமார் மற்றும் அஜித்குமார் ஆகியோரை இப்பள்ளியின் தாளாளர் முருகேசன் மற்றும் செயலாளர் பிரு ஆனந்த் பிரகாஷ் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    Next Story
    ×