search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    124 நிறுவனங்களுக்கு அபராதம்
    X

    124 நிறுவனங்களுக்கு அபராதம்

    • சுதந்திர தின விடுமுறை அளிக்காததால் நடவடிக்கை
    • உணவு நிறுவனங்களில் 63 முரண்பாடுகள் கண்டெடுப்பு

    ராணிபேட்டை:

    சென்னை முதன்மை செயலாளரும், தொழிலாளர் ஆணையருமான அதுல் ஆனந்த் உத்தரவின்பேரில் வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக் கம்) ஞானவேல் தலைமை யில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய் வாளர்களுடன் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய விடு முறை தினமான நேற்று சுதந்திர தினத்தன்று கடை கள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டம் மற்றும் விதிகளின் கீழ் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்படாதது என 182 நிறுவனங்கள் மீது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது, கடைகள் மற்றும் நிறுவனங்களில் 57 முரண் பாடுகளும், உணவு நிறுவனங்களில் 63 முரண்பாடுகளும் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 4 முரண் பாடுகளும் ஆக மொத்தம் 124 முரண்பாடுகள் கண்ட றியப்பட்டு அந்நிறுவனங்க ளின் மீது இணக்க கட்டண அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    Next Story
    ×