search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் திருடிய 2 பேர் கைது
    X

    பைக் திருடிய 2 பேர் கைது

    • 4 வாகனங்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இரு சக்கர வாகன திருட்டை கண் டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி உத்தரவிட்டார்.

    அதன்பேரில் துணை போலீஸ் சூப்பி ரண்டு பிரபு மேற்பார்வை யில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டி ருந்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கி ளில் வந்த ஆற்காட்டை சேர்ந்த ஜெயசந்திரன் (வயது 22), வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (20) ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் இருவரும் சேர்ந்து ஆற்காடு பகுதிகளில் இருந்து மோட்டார் சைக்கிள் களை திருடியது தெரியவந்தது மேலும் அவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் களை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×