search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க பொதுக்கூட்டம்
    X

    அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க பொதுக்கூட்டம்

    • ந.வ.கிருஷ்ணன் தலைமையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கலவை:

    ஆற்காடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திமிரி எம்.ஜி.ஆர். திடலில் நேற்று நடந்தது.

    திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் தாமரைப்பாக்கம் த.வ.கிருஷ்ணன், சொரையூர் எம்.குமார் ஆகியோர் தலைமை தாங்கினார். திமிரி பேரூர் கழக செயலாளர் டி.எஸ். கந்தசாமி வரவேற்றார்.

    ஆற்காடு நகர செயலாளர் சங்கர் ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஆற்காடு ஒன்றிய செயலாளர் சாரதி என்கிற ஜெயச்சந்திரன், கணியம்பாடி ஒன்றிய செயலாளர் ராகவன், விழா பாக்கம் பேரூராட்சி கழக செயலாளர் இராம.சேகர், கலவை பேரூராட்சி கழக செயலாளர் சதீஷ், கலவை பேரூராட்சி மன்ற தலைவர் கலா சதீஷ் ஆகியோர் துவக்க உரையாற்றினர்.

    கழக அமைப்பு செயலாளர் முக்கூர் என்.சுப்பிரமணியன், மாவட்ட கழக செயலாளர் சுகுமார், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் அன்பழகன், சீனிவாசன், இளைஞர் அணி செயலாளர் ஏழுமலை, தலைமை கழக பேச்சாளர் பாஸ்கர், மாநில அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் தமிழரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். திமிரி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் உலகநாதன் நன்றி கூறினார்.

    முன்னதாக விழா பாக்கம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சுகுமார் அறிமுகம் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திமிரி எம்.ஜி.ஆர். திடலில் கணேஷ் குழுவினர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆற்காடு தொகுதி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூராட்சி கழக நிர்வாகிகள், மாவட்ட பிற அணி நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னோடிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×