search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அ.தி.மு.க. 52-ஆம் ஆண்டு தொடக்க பொதுக்கூட்டம்
    X

    அ.தி.மு.க. 52-ஆம் ஆண்டு தொடக்க பொதுக்கூட்டம்

    • நகர செயலாளர் தலைமையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் அ.தி.மு.க. 52- ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் மஞ்சுநாதன் தலைமை தாங்கினார்.

    கழக தலைமை செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மணிமேகலை, பொதுக்குழு உறுப்பினர் தணிகாசலம் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய செயலாளர் ராஜா வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் எம்.எல்.ஏ, ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ரவி, கழக செய்தி தொடர்பாளர் சசிரேகா, ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அவைதலைவர் முன்னாள் சோளிங்கர் எம்.எல்.ஏ. சம்பத்,பேரூர் தலைவர் ஆறுமுகம், பேரூர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கோதண்டன், கவுன்சிலர்கள் ராம்குமார், அருள்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×