என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு
- விதிகள் மீறி செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து விளக்கம்
- 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திருமணம் செய்யக்கூடாது
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சித்தூர் செல்லும் சாலை அருகே உள்ள அரசு நிதியுதவி மேல்நிலைப் பயிலும் மாணவர்களுக்கு, காவல்துறை சார்பில் பள்ளியில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு, சோளிங்கர் காவல் நிலைய ஆய்வாளர் பாரதி தலைமை தாங்கினார்.
மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், வீடு மற்றும் பள்ளி அருகே போதைப்பொருள் விற்பனை செய்வது தெரிய வந்தால், அதுகுறித்து காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பாலியல் வன்கொடுமை குறித்தும், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திருமணம் செய்யக்கூடாது.
விதிகள் மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி காவல்துறை சார்பில் எடுக்கப்படும் தண்டனைகள் குறித்து விளக்கப்பட்டது. இதில், உதவி காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் எப்சிபா கேத்ரின் உட்பட பலர் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்