search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    உலக சுற்றுலா தினம் குறித்து விழிப்புணர்வு
    X

    உலக சுற்றுலா தினம் குறித்து விழிப்புணர்வு

    • ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்
    • சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு சுற்றுலா துறையின் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் செயல்பட்டு வரும் பள்ளி, விடுதி மாணவர்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி மற்றும் விடுதி மாணவர்களுக்கு உலக சுற்றுலா தினம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, கொடிய சைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் நல அலுவலர் மூலமாக காரை குழந்தைகள் பள்ளி, காரை ஆதிதிராவிடர் விடுதி, ஆற்காடு கிருஷ்ணாவரம் அரசு பள்ளிகளை சேர்ந்த 50 மாணவர்கள் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு வேலூ ரில் உள்ள மாவட்ட அறிவியில் மையம், கோட்டை, அரசு அருங்காட்சியகம், ஜலகண்டேஸ்வரர் கோவில், ஸ்ரீபுரம் தங்ககோவில் ஆகிய இடங்களுக்கு சென்றனர்.

    நிகழ்ச்சியில் சுற்றுலா அலுவலர் இளமுருகன், சுற்றுலா அலுவலக பணியாளர் அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×