search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வீட்டில் பதுக்கிய கஞ்சா பறிமுதல்
    X

    வீட்டில் பதுக்கிய கஞ்சா பறிமுதல்

    • 1¼ கிலோ கைப்பற்றினர்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரத்தில் உள்ள இலங்கை தமிழர் குடியிருப்பில் வசித்துவரும் ஆரோக்கியம் என்பவர் மகன் கிளிண்டன் என்கிற வினோத்குமார் (வயது 24). இவரது வீட்டில் கஞ்சா பதுக்கு வைத்திருப்பதாக பாணாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது வீட்டில் 1¼ கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதை போலீசார் கைப்பற்றினார்.

    வீட்டில் இருந்து கஞ்சா விற்பனை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கிளிண்டனை கைது செய்து சோளிங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×