search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்
    X

    ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்

    • பொதுமக்கள் கோரிக்கை
    • புகார் அளித்தும் எந்த நடிவடிக்கையும் எடுக்கவில்லை

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட் பட்ட பஜார் பகுதியில் நகராட் சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் உள்ளது . இங்குடில் சுமார் 50 - க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன.

    இந்த கடைகள் கட்டி 40 ஆண்டுகளுக்கு மேலானதால் கட்டி டம் முழுவதும் சேதமடைந்து உள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற் படலாம் என்பதால் வைத்திருப்பவர்கள் மார்க்கெட் தெருவில் கடை கள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்

    கடை இதனால் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நடந்து கூட செல்லமுடியாத அளவிற்கு கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

    திருவிழா, அமாவாசை நாட்களில் சோளிங்கர் மற்றும் சுற் றுப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் காய்கறிகள் வாங்க வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.

    எனவே மார்க்கெட்டில் உள்ள பழைய கடைகளை அகற்றி புதிய கடை கள் கட்டித்தர வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறாக மார்க்கெட் தெருவில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×