search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோளிங்கரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
    X

    சோளிங்கரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

    • முனிரத்தினம் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • போதை பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பிச்சைக்காரன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய குழு உறுப்பினர் சசிகலா கார்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் ஹேமச்சந்திரன், காங்கிரஸ் சோளிங்கர் ஒன்றிய தலைவர் கார்த்தி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் புல்லட் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பிச்சாண்டி அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சிக்கு சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அரசின் விலையில்லா 110 சைக்கிள்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார். மாணவ மாணவிகள் நன்றாக படித்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தர வேண்டும்.

    மாணவர்கள் நன்றாக படித்து டாக்டர், கலெக்டர், போலீஸ் அதிகாரியாகவோ பொறுப்பேற்று சமுதாயத்திற்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும், போதை பொருட்களால் ஏற்படும் தீய விளைவுகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சமையல் அறை கட்டிடம், பள்ளி வளாகத்திற்கு தரை தளம் அமைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

    அப்போது பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாஞ்சாலை, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் தவமணி, தினகரன் மற்றும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் உதவி தலைமை ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×