search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
    X

    போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

    • காலி பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு அறிவிப்பு
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை,

    தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி), ரெயில்வே தேர்வுவாரியம் (ஆர்.ஆர்.பி.) மற்றும் வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் (ஐ.பீ.பி.எஸ்.) நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    தற்போது மத்திய அரசின் உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமான வரித்துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் அஞ்சலக துறையில் உதவியாளர் போன்ற இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும். வயது வரம்பு 1.8.2023 தேதியில் 18 முதல் 27 வயது ஆகும். வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 வருடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்களும், மாற்று த்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

    இலவச பயிற்சி வகுப்புகள்

    ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ படிக்கும் வட்டம் வழியாக போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இந்தபயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு 04172-291400, 9499055897 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வுவாரியம் மற்றும் வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து வரும் நபர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×