search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசுப்பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
    X

    அரசுப்பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் விரக்தி.
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நாகவேடு கிராமத்தில் ஒத்தவாடை பகுதியை சேர்ந்த பாலு இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இரண்டு ஆண் பிள்ளைகள் பாலும் அவர் மனை சவிதாவும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவருடைய மூத்த மகள் ரஞ்சனி நாகவேடு பகுதியில் இருக்கும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில் நேற்று அதற்கான முடிவுகள் வெளிவந்தது. இதில் ரஞ்சனி கணிதம் மற்றும் சமூக அறிவியலில் தேர்ச்சி பெறவில்லை இதனால் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் அவருடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இதுகுறித்து அரக்கோணம் தாலுக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிணத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×