என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் மாதாந் திர மாற்றுத் திறனாளிகளுக் கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.
கலெக் டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, முகாமில் கை, கால் பாதிக்கப்பட்டவர்கள் 124 நபர்களுக்கும், காது கேளா தோர் 48 நபர்களுக்கும், கண் பாதிக்கபட்பட்ட 37 நபர்களுக் கும், பொது நல மருத்துவம் தொடர்பாக 12 நபர்களுக்கும் மற்றும் குழந்தை நல மருத்துவம் தொடர்பாக 15 நபர்களுக்கும் சம்பந்தப்பட்ட மருத்துவர்களால் மாற்றுத்தி றனாளிகள் என மொத்தம் 236 பேருக்கு தேசிய அடையாள அட்டை பெற மருத்துவ சான்றுடன் கூடிய அடையள அட்டைகளை வழங் கினார்.
மேலும் 29 நபர்களுக்கு முதல்-அமைச்சர் காப்பீட்டு திட் டத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது. அறிவுசார் குறைபாடு உடையவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை வேண்டி 12 நபர்களும், வங்கிக்கடன் வேண்டி 8 நபர்களும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 9 நபர்களும், சக்கர நாற்காலி வேண்டி 5 நபர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இனிவரும் காலங்களில் மாதத்தின் முதல் வார செவ்வாய்க் கிழமை தோறும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் மாற்று த்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்தார்.
முகாமில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை முடநீக்கவியல்
வல்லுநர் ஸ்டெல்லா மேரி, எலும்பியல் மருத்துவர் வெங்கடேஷ்
மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்