search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க கோரி பா.ம.க. போராட்டம்
    X

    கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க கோரி பா.ம.க. போராட்டம்

    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க சார்பில் கள்ளச்சந்தையில் சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க வலியுறுத்தி முத்துக்கடை பஸ் நிலையத்தில் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி வரவேற்றார்.

    போராட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கள்ளசந்தையில் 24 மணி நேரமும் மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநில துணை பொது செயலாளர் எம்.கே.முரளி, மாவட்ட பொருளாளர் ஞானசெளந்தரி, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் இளங்கோ, நிர்வாகிகள் வக்கீல். ஜானகிராமன், கிரிகுமரன், கதிர்வேலன், கஜேந்திரன் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×