search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
    X

    அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

    • திறமையான கேள்விகள் கேட்ட மாணவிகளுக்கு பாராட்டு
    • நீதிபதி புத்தகங்கள் வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நீதிபதி மகாசக்தி தலைமை தாங்கி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, சட்டங்கள் குறித்து பேசினார்.

    பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தசரதன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் காயத்ரி வரவேற்று பேசினார்.

    இதில் வாலாஜா வக்கீல்கள் சங்கத் தலைவர் இளங்கோவன்,வக்கீல்கள் ஸ்ரீதரன், விஜயகுமார், செந்தில் குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றிய சட்ட விளக்கங்களை அளித்து பேசினர்.

    நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திறமையான கேள்விகள் கேட்ட மாணவிகளுக்கு நீதிபதி மகாசக்தி, புத்தகங்கள் வழங்கி பாராட்டினார். முடிவில் சட்டப்பணி குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் சித்ரா நன்றி கூறினார்.

    Next Story
    ×