search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குட்கா விற்ற கடைக்கு சீல்
    X

    குட்கா விற்ற கடைக்கு சீல்

    • போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்
    • 1.5 கிலோ பாக்கெட்டுகள் பறிமுதல்

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுகிறதா என நெமிலி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நெமிலிக்கு செல்லும் சாலையில் உள்ள கடை ஒன்றில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து 1.5 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர் செந்தில்குமார் (வயது 55) என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் குட்கா விற்ற கடையை வருவாய் ஆய்வாளர் பிள்ளையார் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது நெமிலி சப்- இன்ஸ்பெக்டர் லோகேஷ், கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    Next Story
    ×