search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை வழங்கிட கணக்கெடுப்பு
    X

    விழிப்புணர்வு பதாகை வெளியிட்டு கலை நிகழ்ச்சியை கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்த காட்சி.

    மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை வழங்கிட கணக்கெடுப்பு

    • 3 வகைகளாக பிரித்து நடத்தப்படும்
    • கலெக்டர் பேச்சு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனா ளிகளுக்கான உரிமைகள் திட்டம், மாற்றுத்திற னாளிகள் கணக்கெடுப்பு 2023 குறித்து அரசுத்து றைகள், மாற்றுத்தி றனாளிகளின் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு உலக வங்கி நிதியுதவியுடன் மாற்றுத்திறனாளி களுக்கான உரிமைகள் திட்டத்தை செயல்படுத்தி தமிழகத்தின் கடைகோடியில் உள்ள மாற்றுத்திற னாளிகளுக்கும் சேவை களை வழங்கிட மாற்றுத்தி றனாளிகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் 21 வகையான மாற்றுத்தி றனாளிகளை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

    இதில் 40 சதவீதத்திற்கு மேல் குறைபாடுள்ளவர்கள் மட்டுமே மாற்றுத்தி றனாளியாக கருதப்படு வார்கள். கணக்கெடுப்பின் போது மாற்றுத்தி றனாளி களை 3 வகைகளாக பிரித்து கணக்கெடுப்பு நடத்தப்படும்.

    அனைத்து மாற்றுத்திறனா ளிகளுக்கும் நலத்திட்டங்கள் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்ப டுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்தி றனாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இக்கணக்கெ டுப்பு பணிக்கு தங்கள் இல்லம் தேடிவரும் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி விவரங்களை பதிவு செய்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    முன்னதாக மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு 2023 குறித்த விழிப்புணர்வு பதாகை வெளியிட்டு கலை நிகழ்ச்சியையும் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×