என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பைக் திருடிய இளம்பெண் கைது
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர் வாகனங்கள் திருடப்பட்டு வந்தது. போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரக்கோணம் அடுத்த பெருமூச்சு பகுதியில் கடையின் முன்பு நிறுத்தி இருந்த பைக் மாயமானது. இது சம்பந்தமாக அரக்கோணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் ஒரு இளம் பெண் பைக்கை திருடி செல்வது தெரிய வந்தது. சி.சி.டி.வி. காட்சி மூலம் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அந்த இளம் பெண் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அரக்கோணம் அடுத்து பாராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்தியதில் அவரது கணவருடன் சேர்ந்து பல்வேறு பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
போலீசார் அந்த இளம் பெண் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்