search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் திருடிய சகோதரர்கள்
    X

    பைக் திருடிய சகோதரர்கள்

    • ஜி.பி.எஸ். கருவி மூலம் மீட்பு
    • மடக்கி பிடித்து அடி உதை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பெரும்புலிபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவன் இவரது மகன் ராஜ்குமார் என்பவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இவர் தனது பைக்கை பெரும்புள்ளிப்பாக்கம் பங்கு கடை அருகே நிறுத்தி வைத்திருந்தார். அப் போது பைக்கை மர்ம கும்பல் திருடி சென்றனர்.

    அதில் ஜி.பி.எஸ். பொறுத்திருந்தார். இதனால் ராஜ்குமார் பைக் எந்த வழியாக செல்கிறது என பார்த்து தனது நண்பர்களுக்கு தகவலை அளித்துள்ளார். அதன்படி அவர்கள் சென்று பைக்கை திருடி சென்றவர்களை மடக்கி பிடித்துள்ளனர்.

    பின்னர் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவலூர் போலீசார் அண்ணன் தம்பியான ஏழுமலை மற்றும் சீனிவாசன் ஆகியோரை மீட்டுபாணாவரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்று பின்னர் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×