search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொதிக்கும் எண்ணெய் சட்டியில் தவறி விழுந்து மூதாட்டி படுகாயம்
    X

    கோப்புப்படம்

    கொதிக்கும் எண்ணெய் சட்டியில் தவறி விழுந்து மூதாட்டி படுகாயம்

    • தீபாவளி பலகாரம் செய்தபோது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரம் வடகால் கிராமம், திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி முத்தம்மாள் (வயது 70).

    இவர் நேற்று தீபாவளி பண்டிகையில் வீட்டில் பலகாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கொதித்து கொண்டிருந்த எண்ணெய் சட்டியின் மீது தவறி விழுந்தார்.

    இதில் முத்தம்மாள் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த முத்தம்மாளை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது தொடர்பாக சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×