search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சத்துணவு ஊழியர் வீட்டில் திருட்டு
    X

    சத்துணவு ஊழியர் வீட்டில் திருட்டு

    • கதவை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த புது ஒச்சலம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியவதி (வயது 56). சத்துணவு ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டில் தூங்கி விட்டு, நேற்று காலை வீட் டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட் டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ.5000 திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து பாக் கியவதி அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பணத்தை திருடிச்சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×